For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது? ஸ்டாலின் விளக்கம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சியில் குழு அமைக்கப்பட்டதும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்டாலின். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:

stalin meets press, seat sharing with congress party

கேள்வி: திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும்?

பதில்: தொகுதிப் பங்கீடு குறித்து பேச திமுகவில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தரப்பில் இன்னும் குழு அமைக்கப்படவில்லை. அவர்கள் குழு அமைத்தவுடன் விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி விரைவில் அறிவிப்பார்.

கேள்வி:தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?

பதில்: தேர்தல் அறிக்கை முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் வெளியிடப்படும்.

கேள்வி: உடுமலைப்பேட்டையில் பொறியியல் கல்லூரி மாணவர் கெளரவக் கொலை செய்யப்பட்டுள்ளாரே?

இதுபற்றி போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால் காவல்துறை அவரிடம்தான் உள்ளது. தமிழகத்தில் கெளரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.

கேள்வி: கெளரவக் கொலையைக் கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமா?
திமுக நிர்வாகிகளிடம் வரும் 21-ஆம் தேதி கலந்து பேசி போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

English summary
m.k.stalin meets press and explains seat sharing with congress party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X