மதுரை மாநாடு மாபெரும் வெற்றி.. மாநிலம் முழுவதும் எழுச்சி மாநாடு நடத்தப்படும்: ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையை போன்று மாநிலம் முழுவதும் எழுச்சி கூட்டங்கள் நடத்தப்படும் என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மதுரையில் நேற்று திமுக சார்பில் பிரமாண்ட கேள்வி கேட்கும் மாநாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இதில் ஸ்டாலின் உரையாற்றினார்.

ஸ்டாலின் பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், மதுரையில் இருந்து இன்று சென்னை கிளம்பினார் ஸ்டாலின். மதுரை விமான நிலையத்தில் ஸ்டாலின் கூறியதாவது: ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராக உள்ளனர் என்பதை மதுரை கூட்டம் நிரூபித்துள்ளது. மதுரையை கூட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மதுரையை போன்றே பிற பகுதிகளிலும் எழுச்சி கூட்டங்கள் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications