சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
சென்னை: வரலாறு காணாத மழையால் பாதித்துள்ள தமிழகத்தை கருத்தில் கொண்டு, அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய ஆட்சிப்பணி மற்றும் இந்திய காவல் பணி (IAS and IPS ) உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு இந்த மாதம் 18 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தின் தலைநகரான சென்னை வரலாறு காணாத மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இது தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களும் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் உள்ள மாணவ- மாணவியர்கள், இளைஞர்கள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அனைத்தையும் இழந்ததோடு அவர்களும், அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் மழை வெள்ள பாதிப்பில் சிக்கி இன்னும் மீள முடியாது திண்டாடுகிறார்கள்.
பிரதமரே வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு மக்களின் நிலையை நன்கு தெரிந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதும் மனநிலையிலோ அல்லது அதற்கான முன்னேற்பாடுகளிலோ இருக்கும் சூழல் முதன்மை தேர்வு எழுதுவோரிடம் இல்லை.
ஆகவே தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கும் அகில இந்திய சிவில் சர்வீஸ் வாய்ப்புகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க டிசம்பர் 18 முதல் நடைபெறும் முதன்மை தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications