2-ஆவது நாளாக காவிரி உரிமை மீட்பு நடைபயணம் தொடங்கினார் ஸ்டாலின்
தஞ்சையில் 2-ஆவது நாளாக காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தஞ்சாவூரில் 2-ஆவது நாளாக காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் காவிரி மீட்பு உரிமை நடைபயணத்தை திருச்சியில் உள்ள முக்கொம்பில் நேற்று ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதுபோல் இன்று 2-ஆவது நாளாக தஞ்சை சூரக்கோட்டையில் காவிரிக்காக உரிமை மீட்பு பயணம் தொடங்கியது. 6 நாட்கள் நடைபெறும் இந்த பயணத்தின் போது விவசாயிகளை ஸ்டாலின் உள்ளிட்டோர் சந்திக்கின்றனர். இந்த பயணம் கடலூரில் முடிவடைய உள்ளது.











Click it and Unblock the Notifications