நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க விசாரணைக்குழு ஏன்? சிபிஐ விசாரணை தேவை- ஸ்டாலின்
நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணைக்கு குழு அமைத்தது குழப்பமாக உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணைக்கு குழு அமைத்தது குழப்பமாக உள்ளதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் கல்லூரி மாணவிகளை பேராசிரியர் நிர்மலா தேவி, பல்கலைக்கழகத்தில் உயரதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்துவது மற்றும் தவறாக வழிநடத்துவது தொடர்பான ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்த ஆடியோ காட்சி மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெற்றோர்களும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, கல்வித்துறை அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் நிர்மலாதேவியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டாலின், கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த மேலிடத்திற்கு இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றாவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்.
கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்சினையில், வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் இன்று தீரன் சின்னமலையின் 262ம் பிறந்தநாளை தொடர்ந்து கிண்டியில் அவரது உருவசிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணைக்கு குழு அமைத்தது குழப்பமாக உள்ளதாக கூறினார். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசராணை நடத்த வேண்டும் என்றும், அப்போது தான் உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்தார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications