மேகதாது பிரச்சினையை விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.. மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை : மேகதாது பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்து வருவது குறித்தும், மத்திய அமைச்சர் சதானந்த கவுடா புதிய அணைகளை கட்ட கர்நாடக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பும் என்றும், மத்திய அரசும் அதற்கு அனுமதி வழங்கும் என்றும் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், இதற்காக தான் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்து வருகிறோம். நாங்கள் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அவர்கள் சட்டமன்றத்தையே கூட்ட மறுக்கிறார்கள். அனைத்து கட்சி கூட்டத்தை எங்கே கூட்ட போகிறார்கள். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் மட்டும் தான் இதற்கு பரிகாரம் தேட முடியும் என்று கூறினார்.
தொடர்ந்து, தகவல் ஆணையர் நியமனம் குறித்து தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று தான் நம்புவதாக கூறினார்.












Click it and Unblock the Notifications