ஆந்திரப் படுகொலைகள்.. சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தீவிரமாக முயற்சிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
சென்னை: ஆந்திரா போலீஸாரால், இருபது தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஆந்திர மாநில காவல்துறையினர் நடத்தும் விசாரணையில் திருப்தி இல்லை என்று ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகளே அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே உடனடியாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பேஸ்புக் அறிக்கையில், வறுமையின் காரணமாக வயிற்றுப் பிழைப்பிற்கு கூலிகளாகப் போனவர்களை குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில காவல்துறையின் மீது தேசிய மனித உரிமைகள் ஆணையமும், ஆந்திர உயர்நீதிமன்றமுமே கண்டனம் தெரிவித்து விட்ட பிறகும் கூட நியாயமான விசாரணை நடக்க விடாமல் ஆந்திர மாநில அரசு தடுத்து வருகிறது என்பது புலனாகிறது.
மனித நேயம் சிறிது கூட இல்லாமல் தமிழர்களை சுட்டுக் கொன்ற சிறப்பு அதிரடிப்படையை மாநில அரசே பாதுகாக்க முயற்சி செய்வதை அம்மாநில உயர்நீதிமன்றமே விமர்சனம் செய்து, "சிறப்பு அரசு வழக்கறிஞரை நாங்களே நியமிக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்" என்று ஆந்திர அரசை எச்சரித்துள்ளது. அம்மாநில அரசின் இந்தச் செயல் கடும் கண்டத்திற்குரியது.
இனி, இந்த விவகாரத்தில் ஆந்திர மாநில அரசிடமிருந்து நீதி கிடைக்கும் என்று நம்புவதற்கு துளி கூட இடமில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே கோரிக்கை வைத்தபடி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு இதற்கும் மேல் வேறு எந்த காரணமும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன். ஆகவே 20 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஆந்திர உயர்நீதிமன்றம் எல்லாம் ஆந்திர மாநில அரசிற்கு கண்டனம் தெரிவித்த பிறகும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. அரசும், பினாமி முதலமைச்சரும் தமிழக மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகவே இதை நான் பார்க்கிறேன்.
ஆந்திர உயர்நீதிமன்றமே அம்மாநில அரசின் விசாரணையை குறை கூறியுள்ள இந்த நிலையிலாவது உடனடியாக தமிழக அரசு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தன்னையும் ஒரு பார்ட்டியாக சேர்த்துக் கொண்டு சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கோரியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications