ஜூன் 3ம் தேதிக்கு முன்பே... எதிர்க்கட்சித் தலைவராகி விடுவார் ஸ்டாலின்!
சென்னை: சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை அங்கீகரித்து, சட்டசபை செயலகம் ஜூன் 3ம் தேதிக்கு முன்பாகவே அரசாணை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 3ம் தேதிதான் சபாநாயகர் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. அன்று சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவரை அவையின் முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவபரும் சேர்ந்து அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைக்க வேண்டும்.

எனவே ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கும் அரசாணை அதற்குள்ளாகவே வெளியிடப்படும் என்று தெரிகிறது.
சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மிகப் பெரிய எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. அக்கட்சிக்கு 89 இடங்கள் கிடைத்துள்ளன. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு 8 இடங்கள் கிடைத்துள்ளன. மொத்தமாக இந்த இரு கட்சிகளும் சேர்ந்து 97 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவராகும் மு.க.ஸ்டாலின் அமைச்சர் அந்தஸ்தில் செயல்படுவார். அவருக்கு அரசு கார், அலுவலகம், செயலாளர், டிரைவர் என சகல வசதிகளும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications