ப்ளூவேல் விளையாட்டிற்கு தடை.. மத்திய அமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
இளைஞர்களின் உயிரை காவு வாங்கும் ப்ளூவேல் விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : இளைஞர்களின் வாழ்விற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள ப்ளூவேல் இணையதள விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தற்கொலைக்கு தூண்டும் ப்ளூவேல் விளையாட்டை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

ப்ளூவேல் விளையாடியதால் மதுரை திருமங்கலம் அருகே மாணவர் விக்னேஷ் நேற்று தற்கொலை செய்துகொண்டார். அபாயகரமான விளையாட்டை தடை செய்து நாட்டின் எதிர்கால சிற்பிகளான குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். ப்ளூவேலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், உள்துறை அமைச்சகம் முடக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கடிதத்தை மத்தி யஅமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோருக்கு ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார். இளைஞர்களை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் இந்த விளையாட்டில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications