களைகளை பிடிங்கி எறிந்து காங்கிரஸை சுத்தப்படுத்துவோம்: ப.சி ஆதரவாளர்களை தாக்கிய ஞானதேசிகன்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் உள்ள‘களை'களை பிடுங்கி எறிந்து விட்டு சுத்தப்படுத்துவோம் என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் ஞானதேசிகன் ஆவேசமாக கூறியுள்ளார்.
இதன்மூலம் கட்சித்தலைவர் பதவியில் இருந்து தன்னை ராஜினாமா செய்யச் சொன்ன பா.சிதம்பரம் ஆதரவாளர்களை அவர் கடுமையாகத்தாக்கினார்.

லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது தமிழ் நாட்டில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்து மிக மோசமாக தோற்றது.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என்று ப.சிதம்பரம் ஆதரவு மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இதற்கு ஞானதேசிகன் ஆதரவாளர்கள் கூறுகையில், தேர்தல் தோல்விக்கு ப.சிதம்பரம்தான் காரணம் என்று பதிலடி கொடுத்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரித்தது.
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்களை காரணம் பற்றி ஆராய தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை ஞானதேசிகன் இன்று கூட்டினார். சத்திய மூர்த்தி பவனில் கூட்டம் நடந்தது. ஞானதேசிகன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு காங்கிரசில் 59 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். இவர்களில் ப.சிதம்பரம் ஆதரவு தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்ளாமல் அடியோடு புறக்கணித்தனர்.
கூட்டத்தில் ஞானதேசிகன் ஆவேசமாக பேசினார். அவர் கூறியதாவது:-
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் சரியான கூட்டணி அமையவில்லை. தோல்விக்கான காரணம் எல்லோருக்கும் தெரியும். சிலர் என் மீது குற்றம் சொல்கிறார்கள். நான் பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல. தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறேன். ஆனால் கட்சிக்குள் பேச வேண்டியதை வெளியில் அறிக்கை விட்டு பரபரப்பு ஏற்படுத்துகிறார்கள். இது கட்சியை பலவீனப்படுத்தும். இப்படிப்பட்ட களைகள் பிடுங்கி எறியப்படும். காங்கிரசை சுத்தப்படுத்த வேண்டும்.
தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. வெற்றி தோல்வியை ஒன்றாக கருத வேண்டும். இன்று காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. மீண்டும் வருகிற தேர்தலில் எழுச்சி பெறும்.
இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.
ஞானதேசிகன் பேசுகையில், தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ப.சிதம்பரம் ஆதரவாளர்களை தாக்கியும், அவ களை ‘களை'கள் என்று பொருள்படும்படியும் பேசி இருப்பது காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தோல்விக்குப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதால், இதில் மோதல் ஏதும் ஏற்படாமல் தடுக்க சத்தியமூர்த்தி பவன் வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கூட்டம் நடைபெறுவதையொட்டி ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர். இதனால் சத்தியமூர்த்தி பவன் பரபரப்பாக காணப்பட்டது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications