சொந்த மாநிலத்தில் தேர்வெழுத கெஞ்சும் நிலை.. மாணவர்களுக்கு அநீதி.. இயக்குநர் பா.ரஞ்சித் விளாசல்
சொந்த மாநிலத்தில் தேர்வெழுதுவதற்கு கெஞ்சும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளது அநீதி என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : நீட் நுழைவுத் தேர்வை சொந்த மாநிலத்திலேயே எழுத அனுமதி கோரி கெஞ்சும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டிருப்பது அநீதியான செயல் என்று இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கில், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தான் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில், தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் அங்குதான் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசின் இந்தப்போக்கை பலரும் வன்மையாக கண்டித்துள்ள நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் இதுதொடர்பான கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், நீட் தேர்வே வேண்டாம் என்று போராடிய மாநிலத்தின் மாணவர்களை, சொந்த மாநிலத்திலேயே தேர்வெழுத அனுமதியுங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு மத்திய அரசு தள்ளிவிட்டது.
மாணவர்களின் இந்த நிலைக்கு மாநில அரசின் அலட்சியப் போக்குதான் காரணம் என்றும், இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் பா.ரஞ்சித் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications