முழுக்க முழுக்க வெண்கலம்.. அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ள கருணாநிதி சிலை தயார்!
திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட உள்ளது.
சென்னை: திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட உள்ளது.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இவர் மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் இவரது சிலை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. இந்த சிலை இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது.
அறிவாலயத்தில் ஏற்பாடு
இந்த சிலை அறிவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. அறிவாலயம் உள்ளே நுழைந்ததும் நடுவில் தற்போது அண்ணா சிலை இருக்கிறது. அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே கருணாநிதியின் சிலை வைக்கப்பட இருக்கிறது. இதற்காக அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
முழுக்க முழுக்க வெண்கல சிலை
இந்த சிலை முழுக்க முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த சிலையை வடிவமைக்க இரண்டு வாரம் ஆனதாக கூறப்படுகிறது. இன்னும் இதில் சில கடைசி கட்ட பணிகள் மட்டும் செய்யப்பட்டு வருகிறது.
யார் செய்கிறார்
இந்த சிலையை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிமைக்கிறார். இவர் இதற்கு முன்பே தலைவர்களுக்கு சிலை வடிவமைத்துக் கொடுத்தவர். சில கோவில் சிலைகளையும் வடிவமைத்துள்ளார். இவரின் கைவண்ணத்தில்தான் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
|
பெரிய விழா
இந்த சிலை திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படுவது பெரிய விழாவாக நடக்க உள்ளது. ஆனால் இதற்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் இந்த சிலையின் பணிகளைக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.