வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பு சிலைகள் மீட்பு!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடு ஓன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் தீனதயாளன் என்பவரின் வீட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் பிரிவு போலீசாருக்கு புகார் சென்றுள்ளது. வீட்டின் உரிமையாளரான தீனதயாளன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அவர், கடந்த 8 வருடங்களாக கைவினைப் பொருட்களை வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை நடத்தப்படும் வீடு சிலை கடத்தலில் தொடர்புடைய பழைய குற்றவாளிக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது. அந்த வீட்டில் ஏராளமான சிலைகள் உட்பட பாரம்பரிய பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சோதனையில், 34 சாமி சிலைகளை, போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு டி.எஸ்.பி., சுந்தரம் கூறுகையில்,
வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த 34-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரும்பு மற்றும் கற்களால் இந்த ஆன சிலைகள் கோடிக்கணக்கான மதிப்பு வாய்ந்தவை. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிலை கடத்தல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலை கடத்தல் தொடர்பாக வீட்டு உரிமையாளர் தீனதயாளனை தேடி வருகிறோம் என்று அவர் கூறினார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!












Click it and Unblock the Notifications