பொங்கலுக்காக சிறுவனைக் கொளுத்திய சித்தி – சிறுவன் பரிதாப பலி!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொங்கல் தராததற்காக சிறுவனை தந்தையின் இரண்டாவது மனைவி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரனூர் கிராமத்தில் தெற்கு தெருவைச்சேர்ந்தவர் முனியசாமி. கொத்தனார் வேலை பார்க்கும் இவருக்கு 8 வயதில் காமேஷ்வரன் என்ற மகன் 3 ஆம் வகுப்பு படித்து வந்தான். இவனின் சித்தி பேச்சியம்மாள்.
சிறுவனிடம் அருகில் உள்ள கோவிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசாதம் வாங்கிவரும்படி அனுப்பி யுள்ளார்.
பிரசாதத்தை வாங்கிவந்த சிறுவன் பேச்சியம்மாள் கேட்டபோது தர மறுத்திருக்கிறான். அதோடு அவனே அதை சாப்பிட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பேச்சியம்மாள் சிறுவனின் உடலில் மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திவிட்டுள்ளார்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காமேஷ்வரன் இறந்துவிட்டான். இந்நிலையில் பேச்சியம்மாள் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்பட்டு வருகின்றது.












Click it and Unblock the Notifications