ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: ஜெயக்குமார்
ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதில் என அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடும் என்று தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரத்தில் பொதுமக்கள் அமைதி காக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடியில் மக்களின் உணர்வு போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டிற்கு 10 பேர் பலியான சம்பவத்தினால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் போலீசாரின் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் தனது வருத்தத்தினை வெளிப்படுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கூறியதாவது:
இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கலவரம் ஏற்க முடியாதது. அதுமட்டுமல்லாமல் மிகவும் வேதனை அளிக்கிறது. ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல, மக்கள் விரும்பாத எந்த திட்டத்துக்குமே தமிழக அரசு ஆதரவு இல்லை என்றுமே கிடையாது.
மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்கும். பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து ஸ்டெர்லைட் ஆலை அனுமதி பெற்றது. ஆனால் அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தமிழக அரசு வாதிட்டும் வருகிறது. எனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதே அரசின் நிலைப்பாடும் என்பதால் பொதுமக்கள் அமைதி காக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications