ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: ஜெயக்குமார்
ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதில் என அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடும் என்று தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரத்தில் பொதுமக்கள் அமைதி காக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடியில் மக்களின் உணர்வு போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டிற்கு 10 பேர் பலியான சம்பவத்தினால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் போலீசாரின் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் தனது வருத்தத்தினை வெளிப்படுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கூறியதாவது:
இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கலவரம் ஏற்க முடியாதது. அதுமட்டுமல்லாமல் மிகவும் வேதனை அளிக்கிறது. ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல, மக்கள் விரும்பாத எந்த திட்டத்துக்குமே தமிழக அரசு ஆதரவு இல்லை என்றுமே கிடையாது.
மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்கும். பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து ஸ்டெர்லைட் ஆலை அனுமதி பெற்றது. ஆனால் அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தமிழக அரசு வாதிட்டும் வருகிறது. எனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தேவை இல்லை என்பதே அரசின் நிலைப்பாடும் என்பதால் பொதுமக்கள் அமைதி காக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications