ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் கற்கள் வைத்த மர்ம நபர்கள்: காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ப்பு சதியா?
ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் கற்கள் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை- பெங்களூர் மார்க்கத்தில் ரயில் கவிழ்ப்பு சதிக்காக கற்கள் வைக்கப்பட்டனவா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆம்பூர் வீரவர் கோவில் அருகே சென்னை- பெங்களூர் ரயில் மார்க்கத்தில் தண்டவாளத்தில் கற்கள் நிறைய வைக்கப்பட்டிருந்தன. இதனால் சந்தேகமடைந்த ரயில்வே பணியாளர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து கற்கள் தண்டவாளத்தில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டன.

ரயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்ம நபர்கள் யார் என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சென்னை- பெங்களூர் மார்க்கத்தில் செல்லும் ரயில்களை கவிழ்க்கும் சதி நோக்கத்துடன் இந்த கற்கள் வைக்கப்பட்டனவா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கற்கள் உரிய நேரத்தில் அகற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக கூறப்படுதாவது: மைசூரில் இருந்து சென்னை நோக்கி காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை ஆம்பூர் வீரவர் கோவில் பகுதியை கடந்தது. அப்போது ரயில் கற்கள் மீது பயங்கரமாக மோதிய சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் காவிரி எக்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டு ரயிலில் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடங்கள் தாமதமாக சென்னை புறப்பட்டது. இதன்பின்னரே ரயில்வே தண்டவாளங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதில் பெருங்கற்கள் வைத்திருப்பது தெரியவந்தது. சென்னை நோக்கி வந்த காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்கும் சதித்திட்டத்துடன் இக்கற்கள் வைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் சென்னையில் இருந்து உடனடியாக மோப்ப நாய்கள், உதவியுடன் ரயில்வே அதிகாரிகள் ஆம்பூர் சென்றனர். வீரவர் கோவில் பகுதியில் கற்கள் வைக்கப்பட்ட இடத்தில் மோப்பநாய் உதவியுடனும் சோதனைகள், தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஜான்சி என்ற மோப்பநாய் பயன்படுத்தப்பட்டது என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications