தூக்கக் கலக்கத்தில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியவர் கைது
ராமநாதபுரம்: பாம்பன் பாலத்தில் ரயிலை நிறுத்திய மாணவரை போலீசார் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு, சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பாம்பன் பாலத்தில் வந்த போது, திடீரென நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது. இனால் ரயிலில் இருந்த பயணிகள் பலரும் பாலத்தில் பிரச்சனையா அல்லது ரயிலில் பிரச்சனையா என அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால், உஷாரான ரயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீசார், ரயிலின் முன்பதிவு பெட்டியில் ரயில் உள்ள அபாய சங்கலியை ஒருவர் இழுத்ததை கண்டறிந்து, அப் பெட்டிக்கு சென்று, பாலத்தில் ரயில் செல்லும் போது, அபாய சங்கலியை இழுத்தவர் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, பண்ருட்டி அருகே மணலூர் மாதாகோயில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்) என்பவர் தான் ரயில் அபாய சங்கிலியை இழுத்தவர் என தெரிய வந்தது.
அவரிடம் போலீசார் விடாரணை நடத்திய போது, லக்கேஜ் பகுதியில் இவர் படுத்திருந்த போது, கை தவறி அபாய சங்கிலி இழுக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து, ரயில் விதிகளின்படி அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications