"அதிக மதிப்பெண் எடுத்தாகனும்” - கட்டாயப்படுத்திய பெற்றோர்; தற்கொலை செய்த 10-ம் வகுப்பு மாணவி!
சென்னை: சென்னையில் பெற்றோர் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஒரு தனியார் கம்பெனியில் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் செண்பக சாதுதர்ஷணா. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

செண்பகசாது தர்ஷணாவின் பெற்றோர் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றும், அப்படி எடுத்தால் தான் உன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றும் கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது.
பெற்றோர் கூறியது போல் அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா என்று நினைத்த செண்பகசாதுதர்சணா மன வருத்தத்தில் கடந்த சில நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனவேதனை அதிகமானதால் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சென்ற போலீசார் மாணவி உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications