பிஇ படிப்புக்கு மே 3 முதல் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- அமைச்சர் அன்பழகன்
பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதியை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு மே 3-ம் தேதி முதல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பொறியியல் குறித்த விவரங்களை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான மொத்த காலி இடங்கள் மே 15ல் தெரியும்.

பொறியியல் படிப்புக்காக இணையதளங்களில் விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பு வருகிற 29ஆம் தேதி வெளியிடப்படும்.
பொறியியல் கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைனில் நடைபெற உள்ளது. அதேபோல, பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப படிவும் ஆன்லைனிலேயே நடைபெற உள்ளது.
மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மே 3 முதல் 30ஆம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் விண்ணப்பத்தின் ஒரிஜினல் சான்றிதழ்களை அனுப்ப தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ய கூடுதல் கட்டணம் இல்லை. ஆனால் விண்ணப்ப கட்டணம் உண்டு.
அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மற்றும் ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவ-மாணவிகள் பங்கேற்பதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு 42 இலவச கலந்தாய்வு மையங்கள் அமைக்கப்படும். அதற்கான பணி ஜூன் முதல் வாரத்தில் தொடங்குகிறது.
இந்த உதவி மையங்களில் கணினிகள், அச்சுப்பொறிகள், குடிநீர் மற்றும் சிற்றுண்டி வசதிகள் செய்து தரப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்யும்போது அனைத்து மாணவர்களுக்கும் வழிகாட்டி புத்தகம் வழங்கப்படும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக ஓரிரு நாட்கள் தாமதமானாலும் கலந்தாய்வில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications