காரைக்குடிக்கு வந்த "செங்கோட்டை"... மாணவர்களின் கண்கவர் வரலாற்று நிகழ்வுகள் கண்காட்சி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாற்று நிகழ்வுகள் கண்காட்சி நடத்தப்பட்டது.

மாணவர்கள் டெல்லி செங்கோட்டை, உலக உருண்டை மாதிரி, உலக அதிசயங்கள், பல்வேறு நாட்டின் கொடிகள், அனைத்து நாட்டு நாணயங்கள், பூக்களின் வகைகள், நாடுகளின் அஞ்சல் தலைகள், நாடுகள் மற்றும் அவற்றின் சின்னங்கள், கற்களின் மாதிரிகள், மண் வகைகள், நாடுகளின் ஆகாய விமானங்கள் மற்றும் அவற்றின் சின்னங்கள் போன்றவைகளை கண்காட்சியில் அமைத்திருந்தனர்.

முன் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த சேர, சோழ, பாண்டிய அரசாங்கம் பற்றியும், இந்தியாவின் பிரதம மந்திரிகள், ஜனாதிபதிகள் பட்டியல் படங்களுடன் காட்சிபடுத்தியிருந்தனர்.

பல்வேறு நாடுகளின் தேசிய விலங்குகளின் பெயர்கள், இந்திய அறிவியல் அறிஞர்களின் படங்கள் மற்றும் அவர்கள் செய்த சாதனைகள் பற்றி விளக்கிக் கூறினர்.

தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார். பட்டதாரி ஆசிரியர் சித்ரா இக்கண்காட்சிகான ஏற்பாடுகளை செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications