மாணவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் விவசாயிகள், மீனவர்களுக்கு உதவ வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை
மாணவர்கள் எப்போதும் விவசாயிகள், மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று மயில்சாமி அண்ணாத்துரை கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி : மாணவர்கள் எந்தத்துறையில் பணியில் சேர்ந்தாலும் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு தங்களால் இயன்ற அளவிற்கு உதவ வேண்டும் என்று இஸ்ரோவின் இயக்குநரான மயில்சாமி அண்ணாத்துரை கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி சீதா லட்சுமி ராமசாமி கல்லூரியின் 67வது ஆண்டு விழா இன்று நடந்தது. அதில் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, பள்ளி,கல்லூரிகளில் விடுமுறைகள் அதிகம் இருக்கக் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்கள் இடையே போட்டி உருவானால் தான் கல்வித்தரம் மேன்மேலும் உயரும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், தாவரங்களும் விலங்குகளும் பரிமாண வளர்ச்சி பெறவில்லை. மனித குலம் மட்டுமே பல்லாயிரம் ஆண்டுகளாக பரிமாண வளர்ச்சி பெற்றுள்ளது. மனித சமுதாயம் வளர்ச்சி பெற நாம் கற்ற கல்வியே உறுதுணை செய்கிறது.
திருச்சி மாநகரம் இந்தியாவின் தூய்மை நகரப் பட்டியலில் முதலிடம் பெற மாணவர்கள் தங்களால் இயன்றளவு சுற்றுப்புற தூய்மையை பேண வேண்டும். நாடு தூய்மையாக இருந்தால் நாட்டு மக்களின் எண்ணம் தூய்மையானதாக மாறும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் படித்துப் பணிக்குச் செல்லும் மாணவர்கள் தாங்கள் எந்தத் துறையில் பணியில் சேர்ந்தாலும், தங்கள் துறை வாயிலாக விவசாயிகள், மீனவர்கள் என பல தரப்பினருக்கும் தங்களால் இயன்ற நன்மைகளை செய்ய வேண்டும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை கேட்டுக் கொண்டார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications