ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட மாணவிகள்.. மிரட்டிய ஆசிரியர்கள்.. வைரலாகும் வீடியோ
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட சாஸ்தரா பல்கலைக்கழக மாணவிகளை பேராசிரியர்கள் மிரட்டி வகுப்பிற்கு அனுப்பினர். அப்போது ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ டுவிட்டரில் பதிவேற்றப்பட்டு வைரலாக பரவி வருகிறது.
தஞ்சை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிரந்தர சட்டம் கோரி போராட்டம் நடத்த திரண்ட சாஸ்தரா பல்கலைக்கழக மாணவிகளை பேராசிரியர்கள் தடுத்து நிறுத்தி வகுப்பிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் எந்த வித தடையும் இனி வராத வகையில் நிரந்தர சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்றும் மாணவர்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி, கரூர், நாகை, கோவை என பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சாஸ்தரா பல்கலைக்கழக மாணவிகள் போராட்டத்தை முன்னெடுக்க பல்கலைக்கழக வாயிலின் முன் திரண்டனர். அப்போது, வாசலில் நின்றிருந்த பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகள் மாணவிகளை தடுத்து நிறுத்தி வகுப்பிற்கு செல்லும்படி மிரட்டுகின்றனர்.
Sastra University (Tanjore) Students Were Not Allowed To Protest for #Jallikattu!#Worstpic.twitter.com/IbROg80EAp
— ArunachalaM (@ArunbuddyAP) January 21, 2017
இதனால் போராட்டம் நடத்துவதற்காக திரண்ட மாணவிகள் தயங்கி தயங்கி வகுப்பிற்கு திரும்பிச் சென்றனர். அப்போது மாணவி ஒருவர், ஆசிரியர்கள் மிரட்டுவதை தனது செல்போனில் ரகசியமாக படம்பிடித்துள்ளார். அந்த வீடியோ டுவிட்டரில் பதிவேற்றப்பட்டு வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications