Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“துப்பட்டாவை” தூக்கி வீசிய அரசு பள்ளி மாணவிகள்.. “துப்பட்டா போடுங்க தோழி” நூல் ஆசிரியருக்கு வரவேற்பு

“நான் சொல்லிவிட்டு திரும்பிய சில நிமிடங்களில் அவர்களுடன் வந்திருந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் துப்பட்டா சரியாக போடவில்லை என ஒரு குழந்தையை திட்டிய கதை காதுக்கு வந்தது.”

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் அமைந்துள்ள அரசு உண்டு உறைவிட பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாட சென்ற துப்பட்டா போடுங்க தோழி உள்ளிட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் கீதா இளங்கோவனுக்கு துப்பட்டாவை தூக்கி வீசி மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரி செல்லும்போது அவர்களை வழிநடத்துவதற்காக, அரசு பள்ளிகளின் முன்னாள் மாணவர்களை வைத்தே அறிவுறுத்தல்களை வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை புதிய முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் அரசு பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை அழைத்து மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்ற ஏற்பாடு செய்து இருக்கின்றனர்.

எழுத்தாளர் பகிர்ந்த வீடியோ

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் அமைந்து உள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி மாணவிகளிடம் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் உரையாடினார். இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை பலரும் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

துப்பட்டா போடுங்க தோழி

துப்பட்டா போடுங்க தோழி

அதில் அப்படி என்ன இருந்தது? நிவேதிதாவே என்ன சொல்கிறார் என்று கேட்போம். "நேற்று கல்வராயன்மலை செல்லங்களிடம் உரையாடியபோது "துப்பட்டா போடுங்க தோழி" நூலைப் பற்றி அதிகம் பேசினார்கள். கற்பு, கருப்பை, காதல் என உடல் அரசியலை விரிவாகவே உரையாடினோம். இன்று கீதா தோழர் வருவதாகச் சொல்லி அவரை துப்பட்டாவை கழற்றி வீசி வரவேற்க முடியுமா எனவும் ஒரு கேள்வி கேட்டுவிட்டு வந்தேன்.

துப்பாட்டாவை வீசி வரவேற்ற மாணவிகள்

துப்பாட்டாவை வீசி வரவேற்ற மாணவிகள்

நான் சொல்லிவிட்டு திரும்பிய சில நிமிடங்களில் அவர்களுடன் வந்திருந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் துப்பட்டா சரியாக போடவில்லை என ஒரு குழந்தையை திட்டிய கதை காதுக்கு வந்தது. சரி இன்று எப்படி குழந்தைகள் வரவேற்றார்கள், நேற்று பேசியதன் பயன் இருந்ததா என இரவு கேட்போம் என இருந்தேன். அதற்குள் அருள் ஜெகன் இந்த காணொளியை பதிவிட்டுவிட்டார். குமுதா ஹேப்பி அண்ணாச்சி.

சக்திவாய்ந்த தருணம்

சக்திவாய்ந்த தருணம்

போங்கடா... நீங்களும் உங்க துப்பட்டா போடுங்க தோழியும். என் வாழ்க்கையில் இது மிகவும் சக்திவாய்ந்த தருணமாக இருக்கும். நன்றி பெண்களே, நாம் சரியான பாதையில் செல்கிறோம். சம்பவத்துக்கு பிறகு குழந்தைகள் யாரும் துப்பட்டா போடவில்லை என்கிறார் ஜெகன்" என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.

 ஆசிரியர் மகாலட்சுமி

ஆசிரியர் மகாலட்சுமி

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியரும் செயல்பாட்டாளருமான மகாலட்சுமி பேஸ்புக்கில் பதிவிட்டு இருப்பதாவது, "துப்பட்டா போடுங்க தோழி நூலின் ஆசிரியர் தோழர் கீதா இளங்கோவன் அவர்களின் மாபெரும் வெற்றி இது!மாதவிடாய், துப்பட்டா போடுங்க தோழி இரண்டும் தோழரின் வாழ்க்கையில் மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணிற்கும் மைல்கல். இந்த வீடியோவைப் பார்த்ததும் நெசமாவே செம Vibe ஆகிட்டேன்." என்று பதிவிட்டு உள்ளார்.

கீதா இளங்கோவன் கருத்து

பெண்ணுரிமை சார்ந்த படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் கீதா இளங்கோவன், பள்ளி மாணவிகளுடனான உரையாடலில் அவர்களுக்கான உரிமைகள், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் இந்த திட்டம் சிறப்பான என அவர் பாராட்டி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+