தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம்.. தொடங்கியது ஆய்வு பணிகள்
புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் தொடங்கியது.
நெல்லை: குலசேகரன்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக இஸ்ரோ மைய இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் கூறினார்.
ஜி சாட் செயற்கை கோளுடன் இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி மார்க் 3டி1 ஹரிகோட்டை ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிக்கரமாக செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மகேந்திர கிரி இஸ்ரோவின் திரவ எரிபொருள் உந்தும வளாக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் சென்றிருந்தார். அங்கிருந்து மகேந்திரகிரி திரும்பவதற்காக தூத்துக்குடி வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது,
" ஜி சாட் 19 செயற்கைகோள் ஜிஎஸ்எல்வி மார்க் 3டி1 வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ வரலாற்றில் இது ஒரு சிறப்பு மிக்க நாள். முதல் முயற்சியிலேயே வெற்றி அடைந்துள்ளது. இந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் கிரியோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்பட கூடியது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.
இந்த செயற்கைகோள் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து 3 நாட்களில் விண்ணில் நிலை நிறுத்தப்படும். பின்னர் அது முழுமையாக செயல்பட தொடங்கும். கிரியோஜெனிக் தொழில் நுட்பத்தில், செயல்பட கூடிய இந்த ராக்கெட்டில் சுமார் 4 டன் எடை வரையுள்ள செயற்கை கோள்களை விண்ணில் எடுத்து செல்ல முடியும் .
இதை 6 டன் வரை விண்ணுக்குக் கொண்டு செல்லும் கிரியோஜெனிக் தொழில் நுட்பம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இந்த தொழில் நுட்பம் இஸ்ரோ சின் என்ற சுத்தகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் மூலம் இயக்கப்பட உள்ளது.
இதற்கான ஆய்வு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முடியும். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள, குலசேகரன்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது." என்று அவர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications