தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம்.. தொடங்கியது ஆய்வு பணிகள்
புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் தொடங்கியது.
நெல்லை: குலசேகரன்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக இஸ்ரோ மைய இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் கூறினார்.
ஜி சாட் செயற்கை கோளுடன் இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி மார்க் 3டி1 ஹரிகோட்டை ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிக்கரமாக செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மகேந்திர கிரி இஸ்ரோவின் திரவ எரிபொருள் உந்தும வளாக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் சென்றிருந்தார். அங்கிருந்து மகேந்திரகிரி திரும்பவதற்காக தூத்துக்குடி வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது,
" ஜி சாட் 19 செயற்கைகோள் ஜிஎஸ்எல்வி மார்க் 3டி1 வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ வரலாற்றில் இது ஒரு சிறப்பு மிக்க நாள். முதல் முயற்சியிலேயே வெற்றி அடைந்துள்ளது. இந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் கிரியோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்பட கூடியது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.
இந்த செயற்கைகோள் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து 3 நாட்களில் விண்ணில் நிலை நிறுத்தப்படும். பின்னர் அது முழுமையாக செயல்பட தொடங்கும். கிரியோஜெனிக் தொழில் நுட்பத்தில், செயல்பட கூடிய இந்த ராக்கெட்டில் சுமார் 4 டன் எடை வரையுள்ள செயற்கை கோள்களை விண்ணில் எடுத்து செல்ல முடியும் .
இதை 6 டன் வரை விண்ணுக்குக் கொண்டு செல்லும் கிரியோஜெனிக் தொழில் நுட்பம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இந்த தொழில் நுட்பம் இஸ்ரோ சின் என்ற சுத்தகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் மூலம் இயக்கப்பட உள்ளது.
இதற்கான ஆய்வு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முடியும். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள, குலசேகரன்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது." என்று அவர் தெரிவித்தார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications