சசிகலாவுக்கு ஆதரவாக சைலண்ட் மோடு...'பொறுக்கி' புகழ் சு.சுவாமியின் குடுமி இப்ப யார் கையில் தெரியுமா?
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைதியாக இருந்து வரும் சுப்பிரமணியன் சுவாமிக்கு அவருக்கு நெருக்கமான அதிகாரி அம்மையார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம்.
சென்னை: சசிகலா விவகாரத்தில் அடக்கி வாசிக்கும் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மீது அவருக்கு நெருக்கமாக இருக்கும் மாஜி அதிகாரி அம்மையார் கடும் கோபத்தில் இருக்கிறாராம்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர் அந்த பெண் அதிகாரி. அவருக்கு ஆதரவு கொடுத்தவர் சுப்பிரமணியன் சுவாமி.
சுப்பிரமணியன் சுவாமி நடத்திய ஜனதா கட்சியிலும் அந்த அதிகாரி முக்கிய பொறுப்பு வகித்தார். சுப்பிரமணியன் சுவாமி தற்போது பாஜகவில் இணைந்த நிலையில் அந்த மாஜி அதிகாரி அதிகம் தலைகாட்டுவதில்லை.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். தொடக்கத்தில் சசிகலாவை விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமி இப்போது சைலண்ட் மோடுக்கு போய் 'ஆதரவை' மறைமுகமாக காட்டி வருகிறார்.
தம்மை இந்த நிலைக்கு ஆளாக்கிய மன்னார்குடி கும்பலுக்கு போய் நீங்க எப்படி ஆதரவு தெரிவிக்கலாம் என சுப்பிரமணியன் சுவாமியிடம் எகிறியிருக்கிறார் அந்த அதிகாரி. தமது ஆசீர்வாதம் பெற்ற சீடரின் பேச்சை கேட்டு அங்கிட்டு அமைதியானால் இங்கிட்டு வாங்கிக் கட்ட வேண்டியது இருக்கிறதே என்பதுதான் சு.சுவாமியின் இப்போதைய கலவரமான கவலையாம்.