சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!
வர்தா புயலால் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இன்று காலை முதல் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
சென்னை: சென்னையை நிலைகுலைய வைத்த வர்தா புயல் ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தையும் ஸ்தம்பிக்க வைத்தது. இதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை புறநகர் ரயில் சேவைகள் இன்று காலை முதல் இயக்கப்படுகின்றன.
சென்னையில் வர்தா புயல் தாக்க தொடங்குவதற்கு முன்பே ரயில் சேவைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. பகல் 12 மணியளவில் அனைத்து ரயில் சேவைகளும் முற்றாக நிறுத்தப்பட்டன.

பேய்க்காற்று வீழ்த்திய பெருமரங்கள் பிற மாவட்ட ரயில்களின் வருகையையும் பாதித்தன. இதனால் ஒட்டுமொத்தமாக ரயில் சேவை கடுமையாக பாதிப்புக்குள்ளானது. வர்தா புயல் கரையை கடந்த நிலையில் நேற்று இரவு முதலே மீட்பு மற்றும் பரமாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
We have re-started at 07.00 hrs today our suburban services in NEL and SWL lines ex MMC to GPD/SPE and TRL/AJJ
— DRM Chennai (@DrmChennai) December 13, 2016
இன்று காலை 7 மணி முதல் சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர் அரக்கோணம்- சென்னை இடையேயான மார்க்கத்திலும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.












Click it and Unblock the Notifications