சென்னையில் திடீர் மழை.. அலுவலகம், பள்ளி, கல்லூரி சென்றவர்கள் அவதி!
சென்னையில் பெய்யும் திடீர் மழை காரணமாக அலுவலகம், பள்ளி, கல்லூரி சென்றவர்கள் கஷ்டப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: சென்னையில் பெய்யும் திடீர் மழை காரணமாக அலுவலகம், பள்ளி, கல்லூரி சென்றவர்கள் கஷ்டப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று திடீர் என்று மழை பெய்து வருகிறது. இந்த வருடத்தில் பெய்யும் முதல் மழையாகும் இது.
இந்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. பேஸ்புக், வாட்ஸ் ஆப்களில் கவிதைகள் தேங்கி வருகிறது.

அதிக அளவில் மழை
திடீர் என்று பெய்த மழையால் சென்னை வாசிகள் உற்சாகத்தில் துள்ளி குதித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதே சமயம் நேரமாக நேரமாக மழையின் அளவு குறையாமல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் பல இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது.

பெரிய அளவில் டிராபிக்
இதனால் தற்போது சென்னையில் பெரிய அளவில் டிராபிக் ஏற்பட்டுள்ளது. எக்மோர், நுங்கம்பாக்கம், மெரினா, கிண்டி, வடபழனி, அண்ணாநகர், சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, தாம்பரம், அம்பத்தூர், கோடம்பாக்கம், கோயம்பேடு என முக்கியமான பகுதிகள் எல்லாவற்றிலும் பெரிய அளவில் டிராபிக் ஏற்பட்டுள்ளளது. இந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் தேங்கி உள்ளது.

கஷ்டம்
இந்த இடங்களில் எல்லாம் மழை திடீர் என்று பெய்துள்ளது. இதனால் கல்லூரி, பள்ளி சென்றவர்கள் திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். நிறுவங்களின் பணி புரியும் ஊழியர்களும் மிகவும் அதிக அளவில் கஷ்டப்பட்டு வருகிறார்கள். பல இடங்களில் இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

நாளை விடுமுறை
இந்த மழை இப்படியே தொடர்ந்தால் நாளை பள்ளி, கல்லூரி செல்வது மிகவும் கடினமாகும். சென்னையின் பல இடங்களில் இந்த மழையால் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் இரவும் மழை பெய்தால், பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டிய நிலை ஏற்படும்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications