எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா பிறந்த தினம்... இணையத்தில் நினைவு கூர்ந்த இளைஞர்கள்!
ஆச்சர்யமாகத்தான் இருந்தது.... மறைந்து எட்டாண்டுகளான பிறகும் எழுத்தாளர் சுஜாதாவின் பிறந்த நாளான இன்று இளைஞர்கள் அவரைக் கொண்டாடும் விதம் பார்த்து.
எப்படிப்பட்ட பிரபலமாக இருந்தாலும், மறந்து சில மாதங்கள் ஆனதும் ஜஸ்ட் லைக் தட் கடந்து போகிற தலைமுறை இது. அதுவும் எழுத்தாளர்களை... ? பெருசாக கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
ஆனால் சுஜாதா அப்படியா... எழுத்துலகின் சூப்பர் ஸ்டார். வெறும் அலங்காரத்துக்காகவோ ஆர்ப்பாட்டத்துக்காகவோ சொல்லப்படும் வார்த்தை அல்ல. உண்மையாகவே அவரது ஆளுமை, தாக்கம் அப்படி.

அவர் மட்டும் தமிழில் இத்தனை நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள், விஞ்ஞானக் கதைகள், சங்க இலக்கியத்துக்கான தெளிவுரைகள், நாடகங்கள், குறிப்பாக கணிணி தொடர்பான புத்தகங்கள் எழுதாமல் போயிருந்தால்... நான்கு தலைமுறைகளுக்கு தமிழின் அடுத்தடுத்த பரிமாணங்களை அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைக்காமலே போயிருக்கும்.
தமிழுக்கு சுஜாதா செய்தது வெறும் பணியல்ல.. திருப்பணி. இதில் எந்த மிகையும் இல்லை.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு மூத்த மொழியை, கணிணிக்கு ஏற்றமாதிரியான நவீனத்துக்கு மாற்றியதில் சுஜாதாவின் பங்கு மகத்தானது.
விஞ்ஞானம் தெரிந்த எல்லாராலும் அதை சுவையாகச் சொல்லத் தெரியாது, எழுதவும் வராது. ஆனால் சுஜாதா அதில் 'பிரம்ம ராட்சஸன்'. தமிழ் நூல்கள் வாசிக்கத் தெரிந்த அனைவருமே ஒப்புக் கொள்வார்கள், அவர்கள் மிக சுவாரஸ்யமாக வாசித்த அறிவியல் புத்தகங்கள் சுஜாதா எழுதியவைதான் என்பதை. ஆங்கிலத்தில் உள்ள Authentic என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் சுஜாதா எழுதிய விஞ்ஞான நூல்கள் மற்றும் விஞ்ஞான அடிப்படையில் அமைந்த கதைகள்.
சொர்க்கத் தீவு அல்லது ஜீனோ அல்லது மேற்கே ஒரு குற்றம்... இப்படி எந்தக் கதையாக இருந்தாலும் அதைப் படிக்கும்போது நூறு சதவீத நம்பிக்கை இருக்கும்.
வருங்கால விஞ்ஞான வளர்ச்சியைக் கணித்துச் சொன்னதில் சுஜாதா ஒரு தீர்க்க தரிசி. கம்ப்யூட்டர், இணையம், செயற்கைக் கோள் விஞ்ஞானம், இன்றைய ஜிபிஆர்எஸ்... இவற்றையெல்லாம் எண்பதுகளிலேயே எழுதிவிட்டவர் சுஜாதாதான்.
தமிழை எத்தனை சுவாரஸ்யமான நடையில் எழுத முடியும் என்று காட்டியவர் அவர்தான். அவரது நான்கு நாவல்களைத் தொடர்ச்சியாக வாசித்தவர்களை அவரது எழுத்து நடை சுலபத்தில் தொற்றிக் கொள்ளும். இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரது நடையில் சுஜாதா சிரிப்பதை முதல் நான்கு பக்கங்களைக் கடந்த உடனே புரிந்து கொள்வீர்கள்!
எட்டாண்டுகள் அல்ல... இன்னும் ஒரு நூறு தலைமுறை கடந்த பின்னும் நிலைக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாதா... வள்ளுவர், பாரதி மாதிரி. அவரைப் படித்தவர்களுக்கு இது புரியும்!
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications