கொதிக்கும் சூரியன் இன்னும் சுடப்போகுது.... மே 4 முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் வரும் 4ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. மே 28ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் நீடிக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வரும் 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி 28 வரை நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. மார்ச் மாதத்திலேயே பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவானது.

ஏப்ரல் மாதத்தில் பல மாவட்டங்களில் அனல் காற்று வீசியது. திருவள்ளூரில் அதிகபட்சமாக 113 டிகிரி வெப்பம் பதிவானது. குளுமையான மாவட்டங்கள் கூட வெப்பத்தில் தகித்தன.

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம்

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தொடர்ச்சியாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் இந்த அளவுக்கு வெயில் அடித்தது இல்லை. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் 4ஆம் தேதி தொடங்கி மே 28 வரை நீடிக்கிறது.

வெப்பத்தின் தாக்கம்

வெப்பத்தின் தாக்கம்

அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ளதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடும் வெயிலுடன் தொடங்கும் என்று தெரிகிறது.

சுட்டெரிக்கும் சூரியன்

சுட்டெரிக்கும் சூரியன்

தமிழகத்தில் 6 இடங்களில் நேற்று 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட கூடுதல் வெப்பநிலை பதிவாகி வருவது, நேற்றும் தொடர்ந்தது. பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக நேற்று 104.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

கரூர் பரமத்தியில் 104 டிகிரி, திருச்சி 102.9, வேலூர் 102.9, மதுரை 102.3, திருத்தணி 102.2 ஆக வெப்பநிலை பதிவானது.

வெப்ப சலனம்

வெப்ப சலனம்

அதே நேரத்தில் வெப்பசலனம் காரணமாக குன்னூர், கொடைக்கானல், சேலம், நீலகிரி, வால்பாறை ஆகிய இடங்களில் மழை பெய்தது. அதில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 12.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதே நிலைமை வரும் 7ம் தேதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வருணபகவான்

வருணபகவான்

வெப்ப சலனம் காரணமாக இன்றும் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எது எப்படியோ..கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து, மண்டை காயும் அபாயத்திலிருந்து அவ்வப்போது வருண பகவான் மழையை பொழிய வைத்து காப்பாற்றினால் சரித்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+