நெல்லையில் வறுத்தெடுக்கும் வெயில்: தலைதூக்கும் தண்ணீர் தட்டுப்பாடு
நெல்லை: நெல்லையில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அக்டோபர் மாதம் வழக்கத்திற்கு மாறாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வரும் 20ம் தேதிக்கு மேல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. கொளுத்தும் வெயிலால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு இப்போதே தலை தூக்க ஆரம்பித்துவிட்டது.
மாவட்டத்தின் பல ஊர்களிலும் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது 1 வாரத்திற்கும் மேலாக தண்ணீருக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு வார்டிலும் தண்ணீர் வரும் போது மற்ற வார்டுகளை சேர்ந்த பொதுமக்களும் தண்ணீருக்காக குடங்களை கொண்டு வருவதால் பிரச்சனைகள் உருவாகி வருகிறது. இதனால் அதிகாரிகள் கையை பிசைந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications