மிடாஸ் மதுபான ஆலையை காப்பாற்ற படிப்படியாக மதுவிலக்கு என ஜெ. பேச்சு....ஸ்டாலின் தாக்கு
சென்னை: மிடாசைக் காப்பாற்றத் தான் தமிழகத்தில் மதுவிலக்கை ஒரேயடியாக அமல் படுத்த முதல்வர் ஜெயலலிதா தயங்குவதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.

அதன்படி, இன்று அவர் கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அங்கு அவர் ஓட்டு சேகரிக்க உள்ளார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஸ்டாலின். அப்போது அவர், ‘திமுகவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது' என்றார்.
மேலும், ‘அதிமுக போல் நட்சத்திரங்களை வைத்து திமுக பிரச்சாரம் மேற்கொள்ளாது' எனக் கூறிய ஸ்டாலின், மிடாசைக் காப்பாற்றத் தான் தமிழகத்தில் மதுவிலக்கை ஒரேயடியாக அமல் படுத்த முதல்வர் ஜெயலலிதா தயங்குவதாக குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications