ஷாக்.. தென்காசி அருகே சுரண்டை உதவி சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை.. பின்னணியில் அதிர்ச்சி காரணம்
தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பசுபதி மதுபானத்துடன் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அதற்கான காரணம் குறித்த ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் (உதவி சப்-இன்ஸ்பெக்டர்) பசுபதி. இவருக்கு வயது 55. இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் பணி நேரத்திலும் மதுபானம் குடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி உயரதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன. இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் பசுபதியை கண்டித்துள்ளார். மேலும் பணி நேரத்தில் மதுபானம் குடிக்கக்கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதனால் பசுபதி மனம் உடைந்துள்ளார். இந்நிலையில் தான் பசுபதி மதுபானத்துடன் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். இவரது உடல் பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications