பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறு.. ஜூலை 5ஆம் தேதி ஆஜராக எஸ்வி சேகருக்கு கரூர் நீதிமன்றம் உத்தரவு!
பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எஸ்வி சேகர் ஜூலை 5ஆம் தேதி ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

கரூர்: பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எஸ்வி சேகர் ஜூலை 5ஆம் தேதி ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் பெண் செய்தியாளர்கள் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மிகவும் தரக்குறைவான கருத்து ஒன்றை ஃபார்வர்டு செய்திருந்தார்.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் எஸ்வி சேகருக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன.
எஸ்வி சேகர் மீதான வழக்கில் அவரை கைது செய்ய தடையில்லை என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலை மறைவாக உள்ள எஸ்வி சேகர், போலீசாரிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகிறார்.
இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர் குறித்து எஸ்வி சேகர் அவதூறாக பேசிய வழக்கில் ஜூலை 5ஆம் தேதி ஆஜராகுமாறு கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய குடியரசுக் கட்சி நிர்வாகி தொடர்ந்த வழக்கில் கரூர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications