கருணாநிதி, ஜெயலலிதா வடமொழிப் பெயர்கள்தானே?- சுப்பிரமணிய சுவாமி
சென்னை: பள்ளிகளில் 'சமஸ்கிருத வாரம்' அனுசரிக்கப்படுவதை கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் எதிர்ப்பது சரியல்ல என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். அவர்களின் பெயரை மாற்றி வைத்துக் கொள்ள தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாசா சர்டிபிகேட்
சமூக வலைத்தளத்தில் நடந்த விவாதம் ஒன்றில் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்த சுப்ரமணியசுவாமி, "சமஸ்கிருதம் எதிர்காலத்தின் மொழி. நாசாவே சமஸ்கிருத மொழிதான் கணினிக்கு இலகுவானது என்பதை அடையாளம் கண்டு கொண்டுள்ளது.

சமஸ்கிருத வாரம்
இன்று சமஸ்கிருத வாரம் என்பதை கருணாநிதியும், ஜெயலலிதாவும் எதிர்க்கின்றனர். அப்படியென்றால் பெயரை மாற்றிக் கொள்ளட்டும்.

சமஸ்கிருதப் பெயர்
ஜெயலலிதா என்பது சமஸ்கிருதப் பெயர். கருணாநிதி என்பதும் சமஸ்கிருதப் பெயர்" என்று கூறியுள்ளார் சுவாமி.

தேசநலன் முக்கியம்
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், மாநில நலன்கள் தேச நலன்களைக் கடந்து செல்லக்கூடாது என்றார். "நான் இதனை தமிழ்நாட்டை வைத்தே கூறினேன், தமிழர்களின் நலன் தேச நலன்களைத் தாண்டிச் செல்லக்கூடாது.

சீனாவின் கை ஓங்கியது
முந்தைய ஆட்சியின் முட்டாள் தனத்தினால் இலங்கையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கை ஒங்கியுள்ளது" என்றார்.

முஸ்லீம்களுடன் பேச்சு
"ராமர் கோவில் விவகாரத்தில் முஸ்லிம் சமுதாயத்தினருடன் நிச்சயம் பேச்சு வார்த்தைகள் நடத்துவோம். இஸ்லாம் இறையியல்வாதிகளின் உதவியுடன், மதுரா, அயோத்தி, மற்றும் காசியில் இருக்கும் 3 கட்டுமானங்களை ஏற்க பேச்சு வார்த்தைகள் நடத்துவோம், மசூதிக்கு வேறு இடம் ஒதுக்கிக் கட்டித் தர ஏற்பாடுகள் செய்வோம்" என்றார் அவர்.

மோடியின் சமுதாயப் புரட்சி
அவர் மேலும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், "பாஜக-வில் ஒரு குடும்பம் என்பது இல்லை. தனிநபர்கள் பாஜகவில் ஒட்டுமொத்த அதிகாரத்தை அடைய முடியாது. நரேந்திர மோடி சமுதாயப் புரட்சியை பிரதிநித்துவம் செய்யும் நபர்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications