தமிழக ஆளுநர் ரோசைய்யா ராஜினாமா செய்யனுமாம்: சொல்வது சு.சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக ஆளுநர் ரோசைய்யா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறைக்குப் போனது முதலே சுப்பிரமணியன் சுவாமி ரொம்பவே மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் தமிழக அரசையே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமது ட்விட்டரில் கொந்தளித்தார் சுப்பிரமணியன் சுவாமி.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>The Governor of TN, if he does not advise the CM to maintain constitutional democracy in the state, will have to go.</p>— Subramanian Swamy (@Swamy39) <a href="https://twitter.com/Swamy39/status/518221668733296641">October 4, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>இன்று காலையிலேயே தமது ட்விட்டரில் பதிவிடத் தொடங்கிய சுப்பிரமணியன் சுவாமி, சட்டம் ஒழுங்கை பராமரிக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்.. அப்படி செய்யாவிட்டால் ஆளுநர் பதவியை விட்டு போக வேண்டும் என்று அடுத்த குண்டைப் போட்டுத் தாக்கியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.












Click it and Unblock the Notifications