Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை வருகிறார் சாமி.. 'வரவேற்பு' கொடுப்பார்களா அதிமுகவினர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பி முக்கியப் புள்ளியான சுப்பிரமணியம் சாமி சென்னைக்கு வரவுள்ளார்.

சாமி மீது ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சரமாரியாக அவதூறு வழக்குகளைப் போட்டார். இதையடுத்து கைது பயத்தால் சென்னை பக்கமே வராமல் இருந்தார் சாமி. தற்போது ஜெயலலிதா ஜெயிலுக்குப் போய் விட்ட நிலையில் சாமி சென்னைக்கு வரவுள்ளார்.

Swamy to visit Chennai tonight

ராஜபக்சேவின் கைக்கூலியாக தமிழர்களால் கோபத்துடன் பார்க்கப்படுபவர் சாமி. இவரது இலங்கை ஆதரவு செயல்பாடுகள் தமிழகத்தின் பல்வேறு தரப்பினரையும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கைக்கு ஆதரவாகவும், தமிழக முதல்வருக்கு எதிராகவும் பேசியதால்தான் இவர் மீது சில அவதூறு வழக்குகளை அப்போதைய ஜெயலலிதா அரசு போட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா சிறைக்குப் போக முக்கியக் காரணமானவர் சாமி என்பதால் அவர் மீது அதிமுகவினர் கடும் கோபத்துடன் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இன்று இரவு சென்னைக்கு வருகிறார் சாமி. நாளை அவர் பிரிட்டிஷ் கவுன்சிலில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கிறார். அதன் பின்னர் அவர், சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு தண்டனையில் இருந்து ஜெயலலிதா ஜாமீன் கேட்கும் விவகாரம், தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் ஆகியவை குறித்து "முக்கிய" பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஜெயலலிதா சிறைக்குப் போயுள்ள நிலையில் சாமி சென்னைக்கு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் சாமியைக் கண்டித்து அதிமுக மகளிர் அணி கொடுத்த "பலத்த வரவேற்பு" மக்கள் கண்களிலிருந்து இன்னும் கூட மறையவில்லை. அந்த வரவேற்புக்குத் தலைமை தாங்கியவர் இப்போதைய அமைச்சர் பா. வளர்மதி ஆவார்.

எனவே இந்த முறையும் அதேபோன்ற வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+