சுவாதி கொலை வழக்கு: கொலையாளியை அடையாளம் காண புழல் சிறையில் அணிவகுப்பு
சென்னை: பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் சென்னை புழல் சிறையில் கொலையாளியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிபதி சங்கர் முன்னிலையில் நடைபெற்றது. கொலையாளியை அடையாளம் காட்ட சுவாதியின் தந்தை சந்தானகோபாலகிருஷ்ணன் வரவழைக்கப்பட்டிருந்தார்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.

தற்போது ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுவாதி கொலை செய்யப்பட்ட போது, ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள கேண்டீனில் வேலை பார்க்கும் ஊழியர், தமிழ்ச்செல்வன் என்ற ஆசிரியர் மற்றும் சிலர் கொலையாளியை நேரில் பார்த்துள்ளனர்
இதனால் கொலையாளியை அடையாளம் காட்டும் விதமாக ராம்குமார் மற்றும் பிற நபர்களை வரிசையாக நிற்கவைத்து அடையாள அணி வகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இந்த அடையாள அணிவகுப்பை நடத்துவதற்கு ஒரு நீதிபதியை நியமிக்கும்படி சென்னை எழும்பூர் தலைமை மாஜிஸ்திரேட்டிடம், நுங்கம்பாக்கம் போலீசார் மனு கொடுத்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் இந்த அடையாள அணிவகுப்பை நடத்த, சென்னையில் உள்ள மூத்த சிவில் நீதிபதியும், சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமான ஆர்.சங்கரை நியமித்து உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னை புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது அடையாளம் காண சுவாதியின் தந்தை சந்தானகோபாலகிருஷ்ணன் வரவழைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி சங்கர், உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி அணிவகுப்பு நடைபெற்றது; இந்த விவரங்கள் உநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications