ராம்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி.. இது பாதியில் "எஸ்" ஆன கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தது!
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. புலன் விசாரணை முடியாததால் ராம்குமாரை ஜாமீனில் விடுவிக்க முடியாது என நீதிபதி கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை வெட்டிக் கொலை செய்ததாக சிசிடிவி வீடியோ ஆதாரத்தை வைத்து விசாரணை நடத்திய போலீசார், நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமாரை கைது செய்தனர்.

ராம்குமாருக்கு ஜாமின் வழங்க கோரி, கடந்த 5 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வக்கீல் மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்திருந்தார். இந்த கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ராம்குமார் சார்பில் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.
அப்போது, ராம்குமாருக்கு தெரியாமலேயே இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விளம்பரத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதை தள்ளுபடி செய்யவேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
இதையடுத்து மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி ஜெயசந்திரன், ஜாமீன் மனு தாக்கல் செய்ய குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களிடம் இருந்து வக்காலத்து மனுவில் கையெழுத்து வாங்கத் தேவையில்லை. ஆனால், இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராம்குமாருக்கு தெரியாமலேயே இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு வக்கீல் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். அதனால், இதுகுறித்து மனுதாரர் தரப்பு வக்கீல்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறி விசாரணையை 15ம்தேதிக்கு தள்ளிவைத்தார்.
அதே நேரத்தில் ராம்குமார் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர், ராம்குமாருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
ராம்குமார் தற்போது விசாரணைக் காவலில் உள்ளதையும், அவரிடம் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சுவாதி கொலை வழக்கு தொடர்பாக தற்போது புலன்விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மனுதாரர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை எனக்கூறி ராம்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications