ஓபிஸ் அறிக்கை விட்டாரா இல்லை குறட்டை விட்டாரா? டி. ராஜேந்தர் காட்டம்
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி கடைசி நேரத்தில்தான் தமிழக அரசு முயற்சி எடுத்தது என்று டி. ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி கடைசி நேரத்தில்தான் தமிழக அரசு முயற்சி எடுத்தது என்று டி. ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிக்கைவிட்டாரா இல்லை குறட்டை விட்டாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக முதல்வர் ஓபிஎஸ் அறிக்கைவிட்டாரா இல்லை குறட்டை விட்டாரா என்று லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொங்கல் நெருங்கி வரும் வேலையில் ஜல்லிக்கட்டுத் தொடர்பாக இடைக்காலத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்ததோடு, ஜல்லிக்கட்டுத் தொடர்பான தீர்ப்பு எழுதப்பட்டுக் கொண்டிருப்பதால் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுகுறித்து டி. ராஜேந்தர் கூறியதாவது:
இளிச்சவாய் தமிழர்கள்
ஜல்லிக்கட்டு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை குறை கூறும் பாஜக, ஏன் ஜல்லிக்கட்டை நடத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2 ஆண்டுகளாக இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் காலதாமதம்? தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைக்கிறார்கள். தமிழர்களை கிள்ளுக் கீரையாக கருதுகிறார்கள்.
ஏன் தாமதம்?
தீர்ப்பு ஏன் எழுத தாமதமாகிறது? ஏன் முன் கூட்டியே எழுத முடியாதா? காளை மாட்டை ஏன் காட்சிப் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். அகற்ற வேண்டியது மத்திய அரசின் வேலை இல்லையா? அவசரச்சட்டம் கொண்டு வந்து நீக்காதது ஏன்?
ஓபிஎஸ் குறட்டை
மத்திய அரசு ஏன் இத்தனை நாட்கள் காலம் கடத்தியது? கடைசி நேரம் காக்க வைத்திருந்துவிட்டு கழுத்தை அறுக்கும் வேலையை செய்துவிட்டார்கள். தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி அறிக்கை விட்டார். அவர் அறிக்கை விட்டாரா அல்லது குறட்டை விட்டாரா என்பது தெரியவில்லை.
என்ன செய்தார் 50 எம்பிக்கள்?
இத்தனை எம்பிக்களை வைத்துள்ள அதிமுக இத்தனை நாள் வரை என்ன செய்தது? ஜல்லிக்கட்டு விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதனை பச்சை தண்ணீர் ஊற்றி அணைக்க முடியாது. ஆக. ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்று டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications