நாங்களும் காவிரிக்காக போராட்டம் நடத்தினோம்ல... 'கணக்கு' காட்டிவிட்டு எஸ்கேப்பான திரை உலகம்!
திரை உலகத்தினர் நாங்களும் போராட்டம் நடத்தினோம் என்பதற்காக இன்று மவுனப் போராட்டம் நடத்தி உள்ளனர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் எதிர்ப்புக்காக தமிழகமே போராடி வருகிறது. இதனால் வேறுவழியே இல்லாமல் திரை உலகத்தினர் நாங்களும் போராட்டம் நடத்தினோம் என்பதற்காக இன்று பெயர் அளவுக்கு ஒரு போராட்டம் நடத்தி முடித்திருக்கிறது திரை உலகம்.
மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்தது முதலே தமிழகம் தொடர்ந்து போராட்ட களமாகத்தான் இருந்து வருகிறது. தற்போதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றுக்காக ஒட்டுமொத்த தமிழகமே போராடி வருகிறது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் துரோகம் செய்துவிட்டது மத்திய அரசு. இதனால் தமிழகமே கொந்தளித்து போயுள்ளது.
அரசியல் களத்துக்கு வந்துவிட்ட ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினர். ஆனால் தங்களது படங்களுக்கு கர்நாடகாவில் பாதிப்பு வந்துவிடுமோ என பெரும்பாலான நடிகர்கள் மவுனமாக இருந்தனர்.

இதனால் கடும் விமர்சனங்களும் எழுந்தன. இப்போது நாங்களும் போராட்டம் நடத்தினோம் பாருங்க என்பதற்காக மவுன அறவழி போராட்டம் என கூறி 'அரட்டை கச்சேரி' ஒன்றை 4 மணிநேரம் மட்டுமே நடத்தி முடித்திருக்கிறது திரை உலகம்,.
இந்த கூட்டத்தில் ஏதாவது பேச போய் புதிய படங்கள் வரும் போது கர்நாடகாவில் வெளியிட முடியாமல் போய்விடுமோ என்கிற அச்சம்தான் இந்த மவுன அறவழி போராட்டம். இதில் அமர்ந்ந்த பெரும்பாலான நடிகர்கள் ஏதோ பிக்னிக் வந்தது போல உட்கார்ந்தனர். இன்னும் சிலர் முகத்தை எங்கே டிவியில் காட்டிவிடுவார்களோ? என அஞ்சி பதுங்கிக் கொண்டிருப்பதையும்தான் பார்க்க முடிந்தது.

பின்னர் மிக சரியாக பகல் 1 மணிக்கு மவுன அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொண்டு மத்திய உணவுக்கு கிளம்பி போய்விட்டனர்.
இதன் பெயர் 'போராட்டம்'?












Click it and Unblock the Notifications