நொடிக்கு நொடி.. கரண்ட் பில் கட்ட போறீங்களா? மின்சார கட்டணம் கட்டுவதில் புது மாற்றம்.. தமிழக அரசு மாஸ்
சமீபகாலமாகவே, கரண்ட்பில் ரீடிங் எடுப்பதில் நிறைய குளறுபடிகள் நடப்பதாக பொதுமக்கள் தரப்பில் அதிருப்திகள் எழுந்து வந்தது.. இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் "ஸ்மார்ட்' மீட்டர்" திட்டத்தை கொண்டுவர தமிழக அரசு முயன்று வருகிறது. இதற்காக டெண்டர்களுக்கும் விடப்பட்டுள்ளன.

புதிய நடைமுறை: மற்றொருபக்கம், கரண்ட் பில் குளறுபடிகளை போக்குவதற்காக, "புளூடூத் ஸ்மார்ட் மீட்டரை" இணைக்கும் திட்டத்தையும் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. அதன்படி, வீடுகளில் ப்ளூடூத் மீட்டரை பொருத்தி விட்டால், ஃபைபர் ஆப்டிக் போர்ட்கள் மூலம் அதனை கண்காணிக்கலாம். இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதையும் நம்மால் அறிந்து கொள்ளலாம்
இதற்கு நடுவில் இன்னொரு வசதியை மின்வாரியம் செய்து தரப்போவதாக சொன்னார்கள்.. பொதுவாக, மின் ஊழியர்கள், வீடுகளில் வந்து ரீடிங் எடுத்துவிட்டால், அதற்கு பிறகு, தங்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்வது வழக்கம்.. பிறகு அடுத்த சில நாட்களில், மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்.
மொபைல் ஆப்: ஆனால், கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிக்கவே, புது "மொபைல் செயலி" நடைமுறைக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, உங்கள் கரண்ட்பில் குறித்த அப்டேட், அடுத்த நொடியே, உங்களுக்கு மெசேஜ் மூலமாக கிடைத்துவிடுமாம்.
இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இன்னொரு வசதியை மின்சார வாரியம் ஏற்படுத்தியிருக்கிறது.. அதன்படி, செல்போனில் மெசேஜ் மூலமாகவே கரண்ட் பில் கட்டும் வசதியை மின்வாரியம் கொண்டுவந்துள்ளது.
மின்கட்டணம்: கட்டணம் செலுத்தும் பக்கம் திறந்ததுமே, அதில் நீங்கள் எந்த வகை மின்கட்டணத்தை செலுத்த உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்து அதன்பிறகு, மின்கட்டணத்தை செலுத்திவிடலாம்.. இதன்மூலம் எளிதில் மின்நுகர்வோர் தங்களுக்கான மின்கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகளும் நடந்து முடிந்துவிட்டால், கரண்ட் பில் கட்டுவது மேலும் எளிதாகிவிடும் என்று நம்பப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications