Tamil nadu Exit Poll 2026: தமிழகத்தில் தேர்தல் முடிஞ்சிடுச்சி! எக்சிட் போல் எப்போது? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடையே ஏற்பட்டுள்ளது. தற்போது அதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மாநில அரசியல் களம் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது. இம்முறை திமுக, அதிமுக ஆகிய கூட்டணிகளுடன், நடிகர் விஜய் தொடங்கிய 'தமிழக வெற்றிக் கழகம்' களமிறங்கியிருப்பது, தேசிய அளவிலும் இத்தேர்தலுக்கு முக்கியத்துவம் சேர்த்துள்ளது.

Exit Poll 2026

வாக்காளர்கள் அமோக பங்கேற்பை வெளிப்படுத்திய போதும், வழக்கமான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தாமதமாவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் இம்முறை பதிவான வாக்குப்பதிவு சதவீதம் 84.9% ஆக உயர்ந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாற்றில் இதுவே மிக உயர்ந்த வாக்குப்பதிவாகப் பார்க்கப்படுகிறது. வாக்காளர்களின் இந்த ஆர்வம், கட்சிகளின் தீவிரப் பிரச்சாரம் மற்றும் சமீபத்திய அரசியல் மாற்றங்களின் நேரடிப் பிரதிபலிப்பாகும்.

இதன் காரணமாகவே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீதான எதிர்பார்ப்பும் பெருகியுள்ளது.
இந்தச் சூழலில், எக்ஸிட் போல்கள் வெளியீட்டிற்கு தேர்தல் ஆணையம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுதான் இந்தத் தடைக்கு முக்கிய காரணம்.

ஒரு மாநிலத்தில் வெளியாகும் கருத்துக் கணிப்புகள், பிற மாநில வாக்காளர்களின் மனநிலையைப் பாதிக்கக்கூடும் என்ற அடிப்படையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவை மீறி, எக்ஸிட் போல்களை வெளியிடும் எந்தவொரு அமைப்பும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். இதனால், நாட்டின் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஆய்வு அமைப்புகள் அனைத்தும் ஆணையத்தின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகின்றன.

Exit Poll 2026

மேற்கு வங்கத்தின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடையும் நாளான ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு தமிழ்நாட்டுக்கான எக்ஸிட் போல்கள் வெளியிட ஆணையம் அனுமதி வழங்கும்.

அதைத் தொடர்ந்து, இறுதி வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். அதுவரை அரசியல் வட்டாரங்களில் கணிப்புகளும் யூகங்களுமே மேலோங்கியிருக்கும் நிலையில், அதிகாரப்பூர்வ முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+