நானும் உங்களோடு பயணிப்பேன்.. ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் போட்ட பரபரப்பு பதிவு
சென்னை: தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் பதவி , பணம் ஆகிய மாய வலைக்குள் சிக்குண்டு இருக்கும் நமது கழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை. மாறாக எடப்பாடி பழனிசாமி அணிக்கே தேர்தல் ஆணையம் கட்சி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அனுமதி அளித்தது. இது ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு மிக பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் தரப்பு கடும் அப்செட்டில் இருக்கிறது.

அண்மையில் அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ் தற்போது உள்ள பொதுக்குழுவை கலைப்படுவதாகவும், புதிய பொதுக்குழு விரைவில் தேர்வு செய்யப்படுவதாகவும் கூறியிருந்தார்,
இந்நிலையில் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் பதவி , பணம் ஆகிய மாய வலைக்குள் சிக்குண்டு இருக்கும் நமது கழகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
நமது இரு பெரும் தலைவர்களின் கொள்கைகளையும் சட்ட திட்டங்களையும் கடைப்பிடித்து அவர்களது கனவுகளை உயிர்ப்பிக்கும் வகையிலும் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் முக்கிய தலைவர்களின் கட்டளையை செயல்படுத்தும் விதமாக மட்டும் பதிவுகள் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

மக்கள் வளர்ச்சி பணிகள், தொண்டர்களை ஊக்குவிக்கும் பணிகள் ,கழக நிர்வாகிகளின் உத்தரவை நிறைவேற்றும் வகையிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தலைவன் உருவாக வேண்டும். மீண்டும் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று தமிழகத்தை மிகச் சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே நமது லட்சியம். அதை நோக்கியே நமது பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் அதில் உங்களில் ஒருவனாக நானும் பயணிப்பேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications