பரபரப்பு சம்பவம்.. ஆறுமுகசாமி ஆணையம் வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்!
சென்னை: சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு குறுக்கு விசாரணைக்காக வருகை தந்த நிலையில், அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
ஜெயலலிதா மறைந்தபோது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் ஜார்ஜ். எனவே ஜெ. மறைவு குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷன் சம்மனை ஏற்று, ஆணையத்தின் முன்னிலையில், ஜார்ஜ் ஏற்கனவே ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ ஜார்ஜ் இல்லத்தில் 25 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து சோதனை மேற்கொண்ட நிலையில் நேற்று அவர் வெளிநாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

குறுக்கு விசாரணை
ஆனால், இன்று காலை ஜார்ஜ், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக வந்திருந்தார். இன்று குறுக்கு விசாரணைக்காக அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த தேதி மாற்றப்பட்டு மீண்டும் இன்னொரு நாளில் அவர் நேரடியாக வந்து குறுக்கு விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்று, இமெயில் வாயிலாக, சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

தெரியாமல் போனார்
ஆனால் அதைப் பார்க்காமலேயே நேரடியாக ஆறுமுகசாமி ஆணையத்திற்கு சென்றுள்ளார் ஜார்ஜ். ஆனால் ஆறுமுகசாமி கமிஷன் தரப்பிலிருந்து இன்று உங்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்று நாள் ஒதுக்கப்படவில்லை என கூறிவிட்டனர்.

திரும்பி சென்றார்
இதையடுத்து, அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். சிபிஐ அதிகாரிகள் ஜார்ஜ் வீட்டில் சோதனை மேற்கொண்டுவிட்டு இன்று காலையில் புறப்பட்டுச் சென்றார்கள். அப்படியான நிலையில் அவர் நேற்று வெளிநாட்டில் இருப்பதாக வெளியான தகவல் பொய் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

சிபிஐ பிடியில் ஜார்ஜ்
ஜார்ஜ் நேற்று சென்னையில் இருந்தால் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த வாய்ப்பு அதிகமாக இருந்த நிலையில், அவர் வெளிநாட்டில் இருப்பதாக தகவல் பரவியது. ஆனால், ஜார்ஜ் இன்று ஆறுமுகசாமி விசாரணைக்கு நேரில் ஆஜராக வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications