"இனி ஒரு தற்கொலை நடந்தால் ஆளுநரே பொறுப்பு.." ஆன்லைன் சூதாட்டம்.. அன்புமணி ஆவேசம்
ராணிப்பேட்டை: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் மீண்டும் தற்கொலை நிகழ்ந்தால், அதற்கு ஆளுநரே பொறுப்பு என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் பாமக-வின் வேலூர், அனைக்கட்டு, காட்பாடி, ராணிப்பேட்டை , ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் கூறுகையில், புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு அடிப்படை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகளை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இது கண்டனத்திற்குரியது. தமிழக அரசும், நீர் வளத்துறை அமைச்சரும் ஆந்திர அரசுடன் பேசி அணைகள் கட்டுவதையும் உயரத்தை உயர்த்துவதையும் தடுக்க வேண்டும்.

மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும்
தமிழகத்தில் பாலாற்றில் மேலும் 20 தடுப்பணைகளை கட்ட வேண்டும். அத்துடன் பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தி விவசாயிகளை பாதுகாக்கவும், பாலாறு தென் பெண்ணை இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதேபோல் ஆறுகளில் மணல் அள்ளப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் சட்டவிரோதமாக அனந்தலை பகுதியில் கல்குவாரி செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆளுநரே பொறுப்பு
தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழும் தற்கொலைகளை தடுக்க பாமக தொடர்ந்து சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்டத்திற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஆன்லைன் சூதாட்டத்தால் இன்னொரு தற்கொலை நிகழ்ந்தால், அதற்கு தமிழக ஆளுநரே பொறுப்பு என்று தெரிவித்தார்.

பெட்ரோல் குண்டு
தொடர்ந்து, தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு கலச்சாரம் அதிகரித்துள்ளது. இந்த கலாச்சாரம் வட நாட்டு கலாச்சாரம். இது தமிழகத்திற்கு தேவையில்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதினால், காவல்துறை ஊர்வலத்திற்கு தடை விதிக்கலாம். ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு மட்டும் காவல் துறை தடை விதிக்கவில்லை. இன்னும் சில கட்சிகளின் பேரணிக்கு சேர்த்து தடை விதித்துள்ளது என்று தெரிவித்தார்.

போதைப்பொருள் விற்பனை
பின்னர், போதைப்பொருள் விற்பனை தமிழகத்தில் சரளமாக நடைபெற்று வருகிறது. இதனை முழுமையாக தடுக்க வேண்டும். அதேபோல் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டதை வரவேற்கிறேன். அதே நேரம் மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடங்களை கட்டி தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications