குட்டை பாவாடை சீருடைக்கு குட்பை... நர்ஸ் சீருடை மாற்றம் தமிழக அரசு முடிவு
அரசு மருத்துவமனைகளில் உள்ள நர்ஸ்களின் குட்டைப்பாவாடை சீருடையை மாற்றிவிட்டு புதிய வகை சீருடையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை: அரசு மருத்துவமனைகளில் வெள்ளை நிற குட்டை பாவாடை சட்டையில் நர்ஸ் பணி செய்வோருக்கு புதிய சீருடை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்கள் வெள்ளை நிற குட்டைப் பாவாடை மற்றும் சட்டையில் பணியாற்றி வருகிறாரகள். அவர்களுக்கு அந்த உடை அசௌகரியமாக இருப்பதாக நீண்டகாலமாக புகார் இருந்து வந்தது.

அரசு மருத்துவமனைகளில், கிரேடு- I, II, III எனப்படும் அந்த மூன்று பிரிவுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சீருடைகளையே அரசு மருத்துவமனை நர்ஸ்கள் அணிகிறார்கள்.
பெண் நர்ஸ்கள் குட்டைப் பாவாடை போன்ற உடுப்பு அணிந்து நீண்ட சாக்ஸ்சுடன் பணிக்கு வருகிறார்கள். இந்த சீருடை தற்போதைய பணிகளுக்கு மிகவும் அசௌகரியமாக உள்ளது என்று செவிலியர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நர்ஸ்களின் சீருடையை மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கைவிடுக்கப்பட்டது.
அதன் பேரில் நர்ஸ்களின் சீருடையை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு மாதிரிகளில் நர்ஸ்களுக்கான உடை தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆண் நர்ஸ்களுக்கு பேண்ட், வெள்ளை நிற ஓவர்கோட் அணியலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பெண் நர்ஸ்கள் பேண்ட் மற்றும் சேலை அணியும் வகையில் சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் அரசு மருத்துவமனை நர்ஸ்கள் சீருடை மாற்றப்படும் என்று தெரிகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications