மாட்டிறைச்சி விவகாரம்... தமிழக அரசு விரைவில் நல்ல முடிவெடுக்கும் - திண்டுக்கல் சீனிவாசன் உறுதி
மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதியளித்துள்ளார்.
திருநெல்வேலி: மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் தமிழக அரசு மிக விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , ' மாட்டிறைச்சி தடையைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் அரசு ஆணை கிடைக்கப்பெற்று அதை முழுமையாகப் படித்துப் பார்த்த பின்னரே முடிவை அறிவிப்போம்' என்று கூறியுள்ள நிலையில் அமைச்சர் சீனிவாசன் இவ்வாறு கூறியுள்ளார்.

திருநெல்வேலிக்கு வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், " மாட்டிறைச்சி விற்பனை குறித்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் உத்தரவு தொடர்பாக தமிழக அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் சீனிவாசன், " ரஜினிகாந்த் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று விமர்சித்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் அரசியலுக்கு வரட்டும். வரவேற்கிறோம். அதற்காக அவர் இவ்வாறு கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள இயலாது.
தங்கள் தொகுதி பிரச்னைகள் குறித்துதான், எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்தித்து வருகிறார்கள். சிலர் இதை அரசியலாக்குகிறார்கள். அ.தி.மு.க. அணிகள் விரைவில் இணையும். தமிழகத்தில் 142 ஆண்டுகளாக இல்லாத கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் தண்ணீர்த் தொட்டிகள் அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது." என்று கூறினார்.
-
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications