ரூ. 2,000 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை... தமிழகத்தில் 5 இடங்கள் தயார் என அதிகாரிகள் தகவல்
சென்னை: தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தை (எய்ம்ஸ்) மத்திய அரசு அமைப்பதற்கு ஏதுவாக, ஐந்து இடங்களில் அரசு நிலம் தயாராக உள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழகம், பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் டெல்லியில் உள்ளது போன்று அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையை அமைப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதமே பிரதமர் நரேந்திர மோடிக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். 2014-15-ஆ்ம் நிதியாண்டிலேயே இதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எய்ம்ஸ் மையத்தை மத்திய அரசு அமைக்கத் தேர்வு செய்வதற்காக செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை அருகே தோப்பூர் ஆகிய 5 இடங்களில் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு தயாராக இருப்பதாகவும் இவற்றில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை மத்திய அரசு தேர்வு செய்து எய்ம்ஸ் மையத்தை அமைக்கலாம் என பிரதமருக்கு எழுதிய அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.
சாலை-ரயில் வசதி, தண்ணீர்-மின்சார வசதி ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் இந்த 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மையம் விரைவாக அமையும் நிலையில், மாணவர்களுக்கு தரமான மருத்துவக் கல்வி, பொது மக்களுக்கு தரமான மருத்துவ சேவை, மருத்துவ நிபுணர்களுக்கு ஆராய்ச்சி வசதி ஆகியவை கிடைக்கும். எனவே தமிழகத்தில் எய்ம்ஸ் மையத்தை அமைக்கும் மத்திய அரசின் முயற்சிகள் அனைத்துக்கும் விரைவான ஒத்துழை்ப்பு அளிக்கத் தயார்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications