ரூ. 2,000 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை... தமிழகத்தில் 5 இடங்கள் தயார் என அதிகாரிகள் தகவல்
சென்னை: தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தை (எய்ம்ஸ்) மத்திய அரசு அமைப்பதற்கு ஏதுவாக, ஐந்து இடங்களில் அரசு நிலம் தயாராக உள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழகம், பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் டெல்லியில் உள்ளது போன்று அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையை அமைப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதமே பிரதமர் நரேந்திர மோடிக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். 2014-15-ஆ்ம் நிதியாண்டிலேயே இதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எய்ம்ஸ் மையத்தை மத்திய அரசு அமைக்கத் தேர்வு செய்வதற்காக செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை அருகே தோப்பூர் ஆகிய 5 இடங்களில் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு தயாராக இருப்பதாகவும் இவற்றில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை மத்திய அரசு தேர்வு செய்து எய்ம்ஸ் மையத்தை அமைக்கலாம் என பிரதமருக்கு எழுதிய அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.
சாலை-ரயில் வசதி, தண்ணீர்-மின்சார வசதி ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் இந்த 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மையம் விரைவாக அமையும் நிலையில், மாணவர்களுக்கு தரமான மருத்துவக் கல்வி, பொது மக்களுக்கு தரமான மருத்துவ சேவை, மருத்துவ நிபுணர்களுக்கு ஆராய்ச்சி வசதி ஆகியவை கிடைக்கும். எனவே தமிழகத்தில் எய்ம்ஸ் மையத்தை அமைக்கும் மத்திய அரசின் முயற்சிகள் அனைத்துக்கும் விரைவான ஒத்துழை்ப்பு அளிக்கத் தயார்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications