ஜாதி மோதலில் தமிழகம் 2-வது இடத்துக்கு "முன்னேறியது".... பீகாரை 'தோற்கடித்தது"
சென்னை: ஜாதி மோதல் நடைபெறுவதில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2015ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜாதி மோதல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் முதல் இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு மூன்றாம் இடத்தில் இருந்த தமிழகம் இந்த ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 3ம் இடத்தில் இருந்த பீகார் 2015ம் ஆண்டு 3ம் இடத்திற்கு மாறியுள்ளது.
2014ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜாதி மோதல்களின் மொத்த எண்ணிக்கை 211.
2015ம் ஆண்டில் மட்டும் இந்த எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பாக மாறி 426 ஜாதிய அடிப்படையிலான மோதல்கள் நடைபெற்றுள்ளன என்றும் இதில் 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தேசிய குற்ற ஆவணப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.