தமிழக சட்டசபைக்கு 3 நாட்கள் லீவு! எதற்கு தெரியுமா?
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மதுரையில் இன்று தொடங்குவதை முன்னிட்டு தமிழக சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று மதுரையில் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தமிழக சட்டசபைக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா, இன்று மாலை மதுரை ரிங்ரோட்டில் உள்ள அம்மா திடலில் தொடங்குகிறது. அரசு சார்பில் சபாநாயகர் தலைமையில் நடத்தப்படும் இவ்விழாவில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க உள்ளனர்.

எனவே, இன்று சட்டசபை நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம், சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் அன்றைய நாட்களும் சட்டசபை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் சட்டசபை, ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றின் மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications